தமிழ்நாடு அரசு | Government of Tamil Nadu
        |        |         Screen Reader Access |  A+  A   A-
banner
வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்

வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்

  • மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான மாவட்ட நிருவாகத்தை வழிநடத்துவதற்கும் மேற்பார்வையிடுவதற்கும் வருவாய் நிருவாக ஆணையர் மையமாகவும், முதன்மையாகவும் விளங்குகிறார். மேலும், வருவாய் நிருவாக ஆணையர் மாநில நிவாரண ஆணையராகவும் நியமிக்கப்பட்டு, பேரிடர் நிருவாகத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் பொறுப்புகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  • துறையின் முக்கிய செயல்பாடுகள்:-
    1. பொது வருவாய் நிருவாகம்
    II. நில வருவாய் வசூல்
    III. சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களைச் செயல்படுத்துதல்
    IV. இணையவழி சான்றிதழ்கள் / உரிமம் வழங்குதல்
    V. பொதுமக்கள் குறை தீர்க்கும் பணிகள்
    VI. பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்பு
    VII. பல்வேறு துறைத் தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிகளை அமல்படுத்துதல்.

    நிருவாக அலகுகள்.
    மாவட்ட நிருவாகத்தின் சீரிய மற்றும் திறமையான செயல்பாட்டிற்காகவும், பொது மக்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை குறித்த நேரத்தில் வழங்குவதற்காகவும், கிராமம் முதல் மாவட்ட நிலை வரை வரவாய் துறையின் கட்டமைப்பு நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மாநிலத்தின் நிருவாக அலகுகள் பின்வருமாறு
    மாவட்டம் வருவாய் கோட்டங்களின்
    எண்ணிக்கை
    வருவாய் வட்டங்களின்
    எண்ணிக்கை
    குறுவட்டங்களின்
    எண்ணிக்கை
    வருவாய் கிராமங்களின்
    எண்ணிக்கை
    38 94 317 1,197 16,744

    பணியாளர் அமைப்பு
    வருவாய் நிருவாக ஆணையரகத்தில் 407 அலுவலர்கள் / பணியாளர்களும், மாவட்ட நிருவாகத்தின் கீழ் துணை ஆட்சியர் முதல் கிராம உதவியாளர் நிலை வரை மொத்தம் 53,410 அலுவலர்கள் / பணியாளர்கள் உள்ளனர்.

Untitled Document