வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்
பொங்கல் பண்டிகைக்காக வழங்கப்படும் விலையில்லா வேட்டிகள் சேலைகள் வழங்கும் திட்டம்
தமிழ்நாட்டில், பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசி பெறும் அனைத்து ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில், அரசாணை (நிலை) எண் 23, வருவாய் (இ.ஐ.1(2)) துறை, நாள் 20.01.2004–இன்படி பொங்கல் பண்டிகைக்கு வேட்டி மற்றம் சேலை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், பொங்கல் பண்டிகைக்கு பயனாளிகளுக்கு வழங்கும் பொருட்டு, சேலைகளும் மற்றம் வேட்டிகளும், கைத்தறி ஆணையரகம் மூலம் உற்பத்தி செய்து மாவட்டங்களுக்கு விநியோகத்திற்காக அனுப்பப்படுகிறது.